vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

தொல்காப்பியப் பதிப்பாசிரியர் மழவை. மகாலிங்கையர்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை 1847 ஆகத்து மாதம் பதிப்பித்து முதன்முதல் வெளியிட்டவர் மழவை.மகாலிங்கையர் ஆவார்.இவர் பத்தொன்பதாம் நாற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்.ஆங்கில அறிவும் வாய்க்கப்பெற்றவர்.ஆறுமுகநாவலர் அவர்கள் மொழிபெயர்த்த விவிலிய மொழிபெயர்ப்பே சிறந்தது எனச்சான்று வழங்கியவர்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர்,விசாகப்பெருமாள் ஐயர் ஆகியோரிடம் பாடம் கேட்டவர். சென்னையில் வாழ்ந்தவர்.கம்பராமாயணம்,தணிகைப்புராணம் முதலிய நூல்களில் பெரும் பயிற்சி பெற்றவர்.இலக்கணப்புலமை நிரம்பப் பெற்றவர்.கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக விளங்கியவர்.

காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் நெருங்கியத்தொடர்புகொண்டவர்.இலகணச் சுருக்கம், பஞ்சதந்திர வசனம்,அருணாசல புராணம்-உரை,போதவாசகம்,தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரை(நச்சர்) உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தவர்.

மழவராயனேந்தல் என்னும் ஊரினர்(மதுரைக்கு அருகில்).வீரசைவ மரபினர்.

தொல்காப்பியம் முதல்பதிப்பு திருவண்ணாமலை வீரபத்திரஐயரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
 

தொல்காப்பியப் பதிப்புப் படங்கள்

தமிழின் சிறப்பு உணர்த்தும் நூல்களுள் தொல்காப்பியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கணநூலாகஇதுவிளங்குகிறது. எழுத்ததிகாரம். சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களை உடையது.1610 நூற்பாக்களை உடையது.

இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் 1847 இல் மழவை மகாலிங்கையரவர்களால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.அதன்பிறகு சாமுவேல் பிள்ளை,சி.வை.தாமோதரம்பிள்ளை,
பவானந்தம்பிள்ளை,புன்னைவனநாதமுதலியார்,கு.சுந்தரமூர்த்தி,தண்டபாணிதேசிகர்,
ஆ.சிவலிங்கனார் உள்ளிட்ட அறிஞர்பெருமக்களால் அவ்வப்பொழுது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

பழைய பதிப்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று இன்று அறிவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. இயன்றவரை அப்பதிப்புகளைப் படத்துடன் அறிமுகம் செய்வேன்.முதற்கண் சில பதிப்புகளின் படங்ககள் மின்வருடியும், படம்பிடித்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகத்தமிழர்கள் கண்டு களிப்பதுடன கருத்துகள் எழுத என் முயற்சிக்கு உதவியாக இருக்கும்.



1.மழவை மகாலிங்கையர் பதிப்பு(1847,ஆகத்து)


2.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


3.சாமுவேல் பிள்ளை பதிப்பு (1858)


4.சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பு(1868)


5.இராசகோபாலபிள்ளை பதிப்பு( 1868)


6.சு.கன்னியப்ப முதலியார் பதிப்பு(1868)
நன்றி : 1-6 படங்கள் தொல்காப்பியப் பதிப்புகள்,ச.வே.சு


7.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


8.பவானந்தம்பிள்ளை பதிப்பு(1917)


9.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


10.கா.நமச்சிவாயமுதலியார் பதிப்பு(1922)


11.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)


12.சி.புன்னைவனநாத முதலியார் பதிப்பு (1922)

No comments:

Post a Comment