"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே." |
செந்தமிழ் இலக்கணநூலாகிய தொல்காப்பியம் எழுத்ததிகாரம். சொல்லதிகாரம், பொருளதிகாரமென மூன்று அதிகாரங்களை உடையது. அவற்றுள், முன் ஐந்தியலும் நச்சினார்க்கினியர் உரையும், பின் நான்கியலும், பேராசிரியர் உரையுமாயுள்ள பொருளதிகாரத்தையும், சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையையும், பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்து முதலில் வெளியிட்டவர்கள், யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை B. A., அவர்களே. எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, மழவை மகா வித்துவான் ஸ்ரீமத் மகாலிங்கையர் அவர்களால் முன் அச்சிடப்பட்டதாயினும் பின்,தென்னாட்டுப் பிரதிகளோடும், ஒப்புநோக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினவர்களும் பிள்ளையவர்களே. இவைகளே யன்றி வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் இலக்கணநூல்களையும், தொகை நூல்களில் ஒன்றாகிய கலித்தொகையையும், சூளாமணி, தணிகைப்புராணம் முதலியவற்றையும், முதலில் அச்சிட்டு வெளிப்படுத்தியவர்களும் பிள்ளையவர்களே. இவைகள், இக்காலத்துப் பிறரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்படுதலின் பிள்ளையவர்கள் தமிழ் நாட்டிற்குச் செய்த அரும் பெருந் தொண்டு எவர்களாலும் மறக்கக்கூடிய நிலைமையை உடையதாயிற்று. ஆதலால் அந்நிலையை ஒழித்து, பிள்ளையவர்கள் தமிழ் உலகுக்குச் செய்த நன்றியையும், அவர்களையும் ஞாபகப்படுத்தற் பொருட்டே இத் தொல் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை முன்னர் அச்சிட்டு வெளிப்படுத்தினோம். |
இதனை யாம் அச்சிடுதற்குமுன், எமது எண்ணத்தை முற்றுவிப்பான் விழைந்து, தமிழ்வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்களிடஞ் சென்று, தொல் - எழுத்ததிகாரம் நச்சி |
Monday, February 7, 2011
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment