தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிப்பு முயற்சிகளைப் பற்றிய பதிவுகள் முழுக்கவும் மேட்டுக்குடியினரின் பார்வையிலேயே இருக்கின்றன. அச்சு வசதி ஏற்பட்ட பிறகு பழந்தமிழ் நூல்களையும், தாம் புனைந்தவற்றையும் பதிப்பித்தவர்கள் என ஆதிக்கச் சாதியினரையே பட்டியலிடுகின்றனர்.
மழவை மகாலிங்க (அய்யர்), ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் (பிள்ளை), உ.வே. சாமிநாத (அய்யர்), சுப்பராயச் (செட்டியார்) என்று அப்பட்டியல் நீள்கின்றது. 1850 தொடங்கி 1920 வரையில் செய்யப்பட்ட பதிப்பு முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த வரலாற்றிலே தலித்துகளுக்கும், இசுலாமியர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதில் முரண்நகை எதுவெனில், தலித் கிறித்துவர்கள் வெள்ளையர்களுக்கு நெருக்கமாய் இருந்ததாலும், இசுலாமியர்கள் ஆளும் நிலை பெற்றிருந்ததாலும் இவ்விரு பிரிவினர்க்குமே அச்சுத்தொழில் சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதே.
நன்றி : கீற்று
மழவை மகாலிங்க (அய்யர்), ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் (பிள்ளை), உ.வே. சாமிநாத (அய்யர்), சுப்பராயச் (செட்டியார்) என்று அப்பட்டியல் நீள்கின்றது. 1850 தொடங்கி 1920 வரையில் செய்யப்பட்ட பதிப்பு முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த வரலாற்றிலே தலித்துகளுக்கும், இசுலாமியர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதில் முரண்நகை எதுவெனில், தலித் கிறித்துவர்கள் வெள்ளையர்களுக்கு நெருக்கமாய் இருந்ததாலும், இசுலாமியர்கள் ஆளும் நிலை பெற்றிருந்ததாலும் இவ்விரு பிரிவினர்க்குமே அச்சுத்தொழில் சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதே.
நன்றி : கீற்று
No comments:
Post a Comment