vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

முன்னோடிகள்: மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்

சிவகங்கைமாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி  அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தில் 1888-ம் ஆண்டு பிறந்தார் சுப்பராம பாகவதர். இவரது தந்தை தமிழ் பண்டிதர். தாய்வழிப் பாட்டனார் சிதம்பர பாகவதர் சிறந்த சங்கீத ஞானமும், தமிழ்ப் புலமையும் வாய்ந்தவர்.சுப்பராமன் சங்கீதத்திலும் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்றார்.

கட்டையான சாரீரம். கடும் பயிற்சி மூலம் அதை பண்படுத்திக் கொண்டார்.பல வித்வான்களிடம் பயின்று சங்கீத ஞானத்தை விருத்தி செய்துகொண்டு சங்கீத சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு சரிசமமாக தமிழிலும் கீர்த்தனைகள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் விளைவாய் தமிழில் கீர்த்தனைகளையும் பதங்களையும் புனைந்தார்.இசைக் கச்சேரிகள் செய்து பணம் ஈட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ராகத்தின் நுணுக்கங்களை அலசி ஆராயும் இசை அறிவு கொண்டவராக இருந்தார்.  தனித்தன்மையுடன் நிரவல் ஸ்வரம் பாடுவார்.இராமநாதபுரம், மைசூர், திருவனந்தபுரம் ஆகிய சமஸ்தானங்களில் பாடி பாராட்டும் பரிசும் பெற்றார்.வித்வான் புஷ்பவனம், காயகசிகாமணி முத்தய்யா பாகவதர் போன்றோரிடம் நட்பு பாராட்டினார். 

கர்நாடக சங்கீதம் தழைத்தோங்க வேண்டும் என்றால் இசைக் கலைஞர்கள் மாதம் ஒருமுறை கூடி அவரவர் மனோதர்மப்படி பாட வேண்டும், மக்கள் அவற்றைக் கட்டணம் இன்றி கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.இவர் பாடும் ராக ஆலாபனங்களையும் ஸ்வரங்களையும் கேட்ட பல வித்வான்கள் இவருடைய இசையினால் உந்தப்பட்டனர். பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் இசை அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே இசை பயின்றார். 

1943-ம் வருடம் சங்கீத வித்வத் சபைக்குத் தலைமை தாங்கினார்.

தமிழியலாய்வுகள் - வரலாற்றின் மறைவோட்டங்கள்(1) உ.வே.சா-ஒளியும் நிழலும்

பத்தொன்பதாம் நூற்றாண்டு, அறிவுத் துறைகளின் ஒருங்கிணைவுக் காலகட்டம்।தொழிற்புரட்சியின் தொடர் விளைவாய் பிரித்தானிய , போர்த்துகீசிய வரவுகள் இந்தியாவிற்குள் காலனிய வரலாற்றைத் தொடங்கி வைக்கின்றன।அச்சு ஊடகம் தமிழை அதன் சகல பரிமாணங்களிலும் நவீன படுத்திற்று।தொடர் வண்டி என்ற நவீன போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் உ।வே।சாவின் பதிப்பும் தேடலும் தொடங்குகிறது. குடந்தையில் ஆசிரியர் பணியும் சென்னையில் சீவக சிந்தாமணி பதிப்பும் என்பது ரயில்வண்டியின் வரவு இல்லையேல் சாத்தியமன்று. 1909 இல்தான் உ.வே.சா சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வருகிறார்.

குடந்தையில் உ.வே.சா தங்கியிருந்தபோதே சி.வை.தாமோதரம் பிள்ளை அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று 1887இல் புதுக்கோட்டை சமஸ்த்தான நீதிபதிகளில் ஒருவராக இருந்து, பின்னர் 1885 இல், குடந்தையில் கருப்பூரில் வாழத் தொடங்கினார்.இங்குதான் சி.வை.தா வும் உ.வே.சாவும் கலந்து பழகினர். சீவக சிந்தாமணி பதிப்பு குறித்த மனஸ்த்தாபமும் சிறு பிரிவும் இருவருக்கும் இவ்விடத்தே உண்டானதை உ.வே.சா. வின் ’என் சரித்திரம்’ பகிர்ந்து கொள்ளும் செய்தி. சி.வை .தா. தம்மிடமிருந்து வஞ்சகமாக, சிந்தாமணி ஏடுகளை வாங்கிச் சென்றதாக உ.வே.சா குறிப்பிடுகிறார்.அனால் இந்நிகழ்வு ‘என் சரித்திரத்தில்’ மட்டும்தான், அதாவது சி,வை.தா வுக்கு எதிரான பதிவாக இடம்பெறுகிறது.மற்றைய, அவரின் உரைநடை நூல்கள் மற்றும் முன்னுரைகள் ஆகியவற்றில் சி.வை.தா வுக்கு எதிரான பதிவைக் காண்பது அரிது. இதனால் என் சரித்திரத்தில் சில பகுதிகள் உ.வே.சா வின் ஆத்ம சீடரான கி.வ.ஜா எழுதியிருக்கலாமோ என்ற ஐயத்தை கைலாசபதி, சிவத்தம்பி , ராஜ்கௌதமன் ஆகியோர் எழுப்புகின்றனர்.வையாபுரிப் பிள்ளையும் இதனை முன்பு குறிப்பிட்டுள்ளார்.இந்த ஐயத்தை என் சரித்திரத்தின் பிற்பகுதியிலுள்ள நடை வேறுபாடுகள் வலுப்படுத்துகின்றன.. ( உ.வே.சா )எனினும் இதனை முற்றான முடிவாக எடுத்துக் கொள்வதற்கில்லை।பல பெரும் அளுமைகள் மீது இவ்வாறான சாடல்கள் ஐயங்கள் உண்டு. ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையிலேயே அவரது மனைவி மிலோவா ஐன்ஸ்டைனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது என்ற அளவிற்கு கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால் இந்த ஐயம் எளிதில் புறக்கணிக்கத்தக்கதும் அல்ல.



உ।வே।சா வுக்கு ஏடுகளைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை இருந்ததில்லை என்பதை வையாபுரிப் பிள்ளை, உ।வே।சா வின் நினைவு நாள் சொற்பொழிவில் திருவல்லிக்கேணி இலக்கியக் கூட்டத்திலேயே பதிவு செய்துள்ளார்.(தமிழ்ச்சுடர் மணிகள் – 6) உ.வே.சா வின் சீவக சிந்தாமணிப் பதிப்பு நடந்தேறியவுடன் அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்த வித்வான்களில் வையாபுரிப் பிள்ளை முதன்மையானவர்.. இவரின் சிந்தாமணிப் பதிப்பு, - சைவ சமாஜப் பதிப்பாக- 1941- இல் வெளியானது.அதில் உ.வே.சா வின் பதிப்பில் காணப்பட்ட பிழைகளைத் தொகுத்து அதன் முன்னுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.உ.வே.சா வின் சிந்தாமணிப் பதிப்புக்கு எதிராக வெளியான மற்றொரு கண்டன நூல் இலங்கையில் இருந்து வந்தது.
பொன்னம்பல தேசிகர் என்னும் தமிழ்ப் புலவர் வெளியிட்ட ‘ ஸீமத். வே. சாமிநாதைய்யரவர்கள் பதிப்பித்த சீவகசிந்தாமணி உரைப் பிழைகள்’ என்பதே அந்நூலாகும்.1887 இல் முதல் பதிப்பும் 1907 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட ஐநூறு பிரதிகள் அச்சுக் கூடத்திலேயே வீணாயின என்பது அன்றைய தொழில் நுட்ப பலவீனத்தை குறிக்கிறது.
உ।வே।சா சிந்தாமணிப் பதிப்பை செய்து வருகையில் சமண சமய விளக்கங்கள் வேண்டி சமண நண்பர்களை நாடிச் சென்றார்। அதில் சந்திரநாத செட்டியாரின் உதவியுடன் திண்டிவனம் வீடூர் கிராமத்தில் அப்பசாமி நயினார் என்பவரை அணுகி பல விளக்கங்களைப் பெற்றுள்ளார்। இவர், குடந்தை அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய, இந்திய அளவில் அறியப்பட்ட புகழ்பூத்த சமண அறிஞர் அ।சக்கரவர்த்தி நயினாரின் தந்தை ஆவார்।
அ.சக்கரவத்தி நயினாரின் நீலகேசி பதிப்பு சமய – திவாகர வாமன முனிவரின் உரையுடன் 1936 இல் வெளியாயிற்று.இதில் சக்கரவத்தி நயினாரின் சமண சமயம் குறித்த முன்னுரை ஆங்கிலத்தில் ஏறத்தாழ 300 பக்கங்களுக்கும் மேலாக விரிந்து செல்கிறது, தமிழ்ச் சமண மரபை சைவ நூல்வழியே அறிந்து வரும் ஒரு தமிழ் மாணவன் இத்தகைய மாற்று மரபை அதன் சொந்த களத்தில் எதிர் நோக்குதல் ஒரு புதிய புரிதலை வழங்கக் கூடியதாகும்.

இத்தகைய சமண நண்பர்களின் வழிகாட்டுதலை உ.வே.சா வுக்கு குடந்தை அரசுக் கல்லூரி சூழல் வழங்கியது. உ.வே.சா , பதிப்பியலில் முன்னோடித் தன்மையும் மாற்று சமயங்கள் மேல் காழ்ப்புணர்வற்ற நோக்கும் கொண்டிருந்த போதிலும் அன்றைய சுதந்திர போராட்டம் முன்னிட்ட தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு எழுச்சிகள் மிகுந்த சமூக அசைவியக்கத்திலிருந்தும் சரித்திரப் போக்கிலிலிருந்தும் உ.வே.சா விலகியே நின்றார்.
(சி.வை,தா)

வ.வு.சி, சிறையில் இருந்தபடியே திருக்குறளுக்கு உரை எழுத முற்பட்ட போது ஏற்பட்ட ஐய்யங்களை தீர்த்துக்கொள்ள உ.வே.சா வுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். உ.வே.சா , அதற்குத் தான் பதிலளித்தால் பிரிட்டிஷ் அரசோடு முரண்பட நேரிடுமோ என்றஞ்சி மாநிலக் கல்லூரியின் ஆங்கிலேய முதல்வரிடம் ஆலோசனைப் பெற்ற செய்தியை உ.வே.சா வின் உரைநடைப் பகுதி ஒன்றிலேயே காணலாம்.. இத்தகைய ஒரு சமூகப் பிரக்ஞையுடந்தான் உ.வே.சா செயல்பட்டுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டு மடங்களின் கல்விச் சூழல், சைவ மடங்களுக்கு இடையேயான பிணக்குகள், அன்றைய தமிழ் இலக்கிய-அரசியல் போக்குகள் ஆகியவற்றை கூர்ந்து அறிய உ.வே.சா வின் உரை நடை நூல்கள் மிக முதன்மையான தரவுகளாகும். இவற்றுக்குள் ஊடாடும் நுண் அரசியல் தளங்களை அறிய முற்படும் முதற் படியாக இக்கட்டுரை அமைகிறது
கூர்ந்து அவதானித்தால் சபாபதி நாவலரின் ‘திராவிட பிரகாசிகை’ என்ற நூல்தான் தமிழ் இலக்கிய வரலாற்று முன்னோடி நூல் எனலாம். இந்நூல் பற்றி தமிழில் அதிகம் பேசப்படவில்லை. பேரா.சிவத்தம்பி மட்டுமே தனது ‘ தமிழில் இலக்கிய வரலாறு ‘ எனும் நூலில் போகிற போக்கில் சுட்டிச் செல்கிறார். இது குறித்த விவாத்த்திற்கு இனி அடுத்த தொடரில் வருவோம்.

நவீன கல்வி உருவாக்கத்திற்கான பாட நூல்களாக தமிழிலக்கியத்தை அச்சேற்றம் செய்த தமிழறிஞர்கள், அதை எதிர்த்து எழுதிய தியாகராஜ செட்டியார் போன்ற குடந்தைத் தமிழ்ப் பேராசிரியர்கள் , ஆறுமுக நாவலரைத் தொடர்ந்து தமிழ் நூல் பதிப்பில் இயங்கிய சி.வை.தா , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த மழவை மகாலிங்க ஐயர் போன்றோரின் தொல்காப்பிய பதிப்புகள் , ரா.ராகவையங்கார் தலைமையில் வெளியான ‘ செந்தமிழ்’ இதழில் வந்த ஆராய்ச்சி கட்டுரைகள் - என 19 ஆம் , 20 ஆம் நூற்றாண்டு அறிவுப் புலம் பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.அது வரலாற்றின் மறைவோட்டங்கள் பலவற்றை நமக்குச் சொல்கிறது.

குறுந்தொகைப் பதிப்புக்கள்

குறுந்தொகைக்கு இதுகாறும் வெளிவந்துள்ள பதிப்புக்களின் தோற்றம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிமுகம் செய்யும் பகுதி இது. பிற நூல்களுக்கும் இது தொடரலாம்.
குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (1915) – தலைப்புப் பக்கம் (அரங்கனாரின் சொந்தப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2000) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு – 2ஆம் பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1937) - தலைப்புப் பக்கம் (உ.வே.சா.வின் சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1983) – முன்னட்டை (அண்ணாமலைப் பல்கலைப் பதிப்பு – முதற்பதிப்பு)

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு


மழவை மகாலிங்கையர் 1847 –லில் வெளியிட்ட தமிழின் மணிமுடியாகிய தொல்காப்பியத்தின் முதற்பதிப்பின் தலைப்புப் பக்கத்தின் தோற்றம். தொல்காப்பியப் பகுதிகளுள் முதன்முறை அச்சேறிய பெருமை எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரைக்குரியதாகும்.

செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்

எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.

செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள்.

வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.யன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள்.


மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள்.

களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.

"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே."

 
 
செந்தமிழ்   இலக்கணநூலாகிய    தொல்காப்பியம்    எழுத்ததிகாரம்.
சொல்லதிகாரம்,  பொருளதிகாரமென  மூன்று  அதிகாரங்களை  உடையது.
அவற்றுள்,   முன்   ஐந்தியலும்   நச்சினார்க்கினியர்   உரையும்,    பின்
நான்கியலும்,   பேராசிரியர்    உரையுமாயுள்ள    பொருளதிகாரத்தையும்,
சொல்லதிகாரம்  நச்சினார்க்கினியர்  உரையையும்,  பல ஏட்டுப் பிரதிகளை
ஒப்புநோக்கி  ஆராய்ந்து  அச்சிற் பதிப்பித்து முதலில் வெளியிட்டவர்கள்,
யாழ்ப்பாணம்  ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை B. A., அவர்களே.
எழுத்ததிகாரம்  நச்சினார்க்கினியர் உரை,                                                     மழவை மகா வித்துவான் ஸ்ரீமத் மகாலிங்கையர்   அவர்களால்   முன்    அச்சிடப்பட்டதாயினும்    பின்,தென்னாட்டுப்      பிரதிகளோடும்,       ஒப்புநோக்கி       அச்சிட்டு
வெளிப்படுத்தினவர்களும்    பிள்ளையவர்களே.    இவைகளே    யன்றி
வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் இலக்கணநூல்களையும், தொகை
நூல்களில் ஒன்றாகிய  கலித்தொகையையும்,  சூளாமணி, தணிகைப்புராணம்
முதலியவற்றையும்,    முதலில்    அச்சிட்டு     வெளிப்படுத்தியவர்களும்
பிள்ளையவர்களே.   இவைகள்,    இக்காலத்துப்    பிறரால்    அச்சிட்டு
வெளிப்படுத்தப்படுதலின் பிள்ளையவர்கள் தமிழ் நாட்டிற்குச் செய்த அரும்
பெருந்    தொண்டு    எவர்களாலும்     மறக்கக்கூடிய    நிலைமையை
உடையதாயிற்று.  ஆதலால்  அந்நிலையை ஒழித்து, பிள்ளையவர்கள் தமிழ்
உலகுக்குச்    செய்த   நன்றியையும்,   அவர்களையும்   ஞாபகப்படுத்தற்
பொருட்டே  இத்  தொல் - எழுத்ததிகாரம்  நச்சினார்க்கினியர்  உரையை
முன்னர் அச்சிட்டு வெளிப்படுத்தினோம்.
 
இதனை  யாம்  அச்சிடுதற்குமுன்,  எமது  எண்ணத்தை முற்றுவிப்பான்
விழைந்து,   தமிழ்வித்துவான்,   பிரமஸ்ரீ  சி. கணேசையர்  அவர்களிடஞ்
சென்று, தொல் - எழுத்ததிகாரம் நச்சி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

*"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், *
* அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."*

என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப்
பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ்
போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

 ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம்
ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை
உலகறியச் செய்தார்.

   - கற்றல்
   - கற்பித்தல்
   - கவிபுனைதல்

எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல்
மிகையன்று.

பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும்
இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின்
மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார். பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள்
பற்றிக் கூறுகையில், *"எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள்,
எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப
இயலாது,"* என்பார்.

சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில்
பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன்
முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய்
மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த
சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது
காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை
மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித்
திங்கள் 26ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப்
பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.
மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார்.

   - நெடுங்கணக்கு
   - ஆத்திச்சூடி
   - அந்தாதிகள்
   - கலம்பகங்கள்
   - பிள்ளைத்தமிழ் நூல்கள்
   - மாலைகள்
   - சதகங்கள்
   - நிகண்டு
   - கணிதம் மற்றும்
   - நன்னூல்

போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.

கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க
விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்"
என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம்
நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.

*"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து *
* தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின் *
* மேயவித்தான் மூவராகும் விளம்பியதென் *
* தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."*

இப்பாட்டில்,
ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி -    நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை
**
*"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல்
என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது *
* பொருளாகும்.*

மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர்
தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில்
அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச்
சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:
*"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும் *
* தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும் *
* ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால் *
* ஈண்டேது செய்யாய் இனி."*

சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத்
துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப்
போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில்
குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த,

   - முத்துவீர வாத்தியார்
   - திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்

முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள்
இவரைத் "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை" எனக் குறிப்பிட்டனர்.

   
   - மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவர்
   - காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
   - திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை
   - மழவை மகாலிங்கையர்


ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார்.


   - எழுத்து
   - சொல்
   - பொருள்
   - யாப்பு
   - அணி

ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார்.


   1. திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும்
   2. கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று
   அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார்.

இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.
பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித்

   - தலபுராணங்களும்
   - பதிகங்களும்
   - அந்தாதிகளும்
   - அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ்
   - கலம்பகம்
   - கோவை
   - உலா
   - தூது
   - குறவஞ்சி 

முதலான நூல்களும் இயற்றினார். 


1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர்
இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார். 



1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை
மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன
வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம்
பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற
பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

1871ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம்
ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான்
திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய
தலங்களுக்குச் சென்றுவந்தார்.

பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில்
சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம்
அடைக்கலப்பத்தைப் பாட, *1.2.1876ல் தம் 61ம் வயதில்* இறைவனடி சேர்ந்தார். 



   - பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன்
   - இணையிலாப் புலவன்
   - மெய்ஞானக் கடல்
   - நாற்கவிக்கிறை
   - சிரமலைவாழ் சைவசிகாமணி



முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.


   - தலபுராணங்கள் 22
   - சரித்திரம் 3
   - மான்மியம் 1
   - காப்பியம் 2
   - பதிகம் 4
   - பதிற்றுப்பத்தந்தாதி 6
   - யமக அந்தாதி 3
   - மாலை 7
   - பிள்ளைத்தமிழ் 10
   - கலம்பகம் 2
   - கோவை 3
   - உலா 1
   - தூது 2
   - குறவஞ்சி 1
   - பிறநூல்கள் 7 



என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும்
இயற்றியுள்ளார்.


*"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை *
* எனப் போர்த்த பண்பின்மிக்க *
* ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்." - *என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே.


நன்றி: தமிழ்மணி (தினமணி)