தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கண, மருத்துவ, கலை நூல்கள் அனைத்தும் தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றை பதிப்பித்த சான்றோர்களின் சேவையினால் நமக்கு கிடைத்தவை. இவ்வகையில் பனை ஓலைச் சுவடிகளைத் தேடி, அதனை வாசித்து, வெவ்வேறு படிகளைச் சோதித்து அவற்றை அச்சுப் பதிப்பிற்கு கொண்டு வந்த பெரியோர்களை நாம் அறிந்திருப்பது மிக அவசியம். சுவடியியல் அறிஞர் முனைவர்.மாதவனின் சுவடிப்பதிப்பியல் எனும் நூல் ஒரு பட்டியலை வழங்கியுள்ளது. அதனை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
*
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பாசிரியர்கள் அச்சில் பதிப்பித்த நூல்களைப் பற்றி மட்டுமே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இயற்றியளித்த தனி நூல்கள் வேறு பலவுமுள்ளன. அவற்றை அவர்தம் வாழ்க்கை வரலாறுகளில் காணலாம்.
*
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பாசிரியர்கள் அச்சில் பதிப்பித்த நூல்களைப் பற்றி மட்டுமே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இயற்றியளித்த தனி நூல்கள் வேறு பலவுமுள்ளன. அவற்றை அவர்தம் வாழ்க்கை வரலாறுகளில் காணலாம்.
எண் | பதிப்பாசிரியர் | நூல்கள் / குறிப்புகள் |
---|---|---|
1 | திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் | 1812 ஆம் ஆண்டில் முதன்முதல் அச்சில் வந்த ‘திருக்குறள் மூலபாடம் – நாலடியார் மூலபாடம் எந்னும் நூலை ஆராய்ந்து பதிப்பித்தவர் இவர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் அறியக்கூடவில்லை. இதே ஆண்டில் அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் திருக்குறள் பதிப்பை (Tirukkural on virtue) ஆங்கில மொழிபெயர்ப்புடன் அச்சில் வெளியிட்டுள்ளார். |
2 | அ. முத்துசாமிப்பிள்ளை | 1816-ஆம் ஆண்டில் திரு.வால்தர் எல்லீஸ் துரையின் கட்டளைக்கிணங்க சென்னைக் கல்விச்சங்கத்துக்காக ஓலைச்சுவடிகளைச் சேகரித்து வருவதற்காகத் தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, முதன்முதலாகச் சுவடிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டவர் இவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி மிக்கவர். வடமொழி, தெலுங்கு இவற்றுடன் ஆங்கிலம் இலத்தீன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்று, கிறித்தவ வேத விற்பன்னராகவும் திகழ்ந்தவர். 1835 ஆம் ஆண்டில் திரு.தாண்டவராய முதலியாருடன் சேர்ந்து இலக்கணப் பஞ்சகங்களில்
|
3 | புதுவை நயனப்ப முதலியார் (1779 – 1845) | சென்னை கோட்டைக் கல்லூரிக் கல்விச் சங்கத் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்த இவர் ஓய்வு நேரங்களில் ஓலைச்சுவடிகளைத் திரட்டி ஆராய்ந்து பதிப்பித்து வந்தவர்.
|
4 | முகவை இராமாநுசக் கவிராயர் | இராமநாதபுர மாவட்டம் முகவை என்னும் ஊரினரான இவர் போர் வீரராக இருந்தவர். பின்னர் மாதவச் சிவஞான முனிவரின் மாணவரான திரு.சோமசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றவர். சென்னை சஞ்சீவிரான்பேட்டையில் சொந்தமாக அச்சுக்கூடம் வைத்திருந்தவர். களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் போன்றோரும் தாம்சன், கிளார்க்கு, ராஜஸ், துரு, போப், இரேனியூஸ் போன்ற ஐரோப்பியரும் இவரிடம் தமிழைப் பயின்றனர்.
|
5 | களத்தூர் வேதகிரி முதலியார் (1795 – 1852) | தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்த இவர் மதுரையிலும் புதுவையிலும் தமிழ்ப் புலவராகத் தொண்டாற்றியவர். சென்னையில் சொந்தமாக அச்சுக்கூடம் அமைத்து நூல்களை வெளியிட்டவர்.
|
6 | மழவை மகாலிங்கையர் | சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர்.
|
7 | தாண்டவராய முதலியார் | சென்னை வில்லிவாக்கத்தில் பிறந்தவர். கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவராக இருந்தவர். தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மராட்டி,சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் வல்லவர்.
|
8 | திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர் | திருத்தணிகை கந்தப்பையர் என்னும் வீரசைவரின் மூத்த மகனாகப் பிறந்த (1798) இவர் சென்னை மாகாணக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். சென்னையில் சொந்தமாக கல்வி விளக்க அச்சகம் ஒன்றை வைத்திருந்தவர். 1828 ஆம்ஆண்டிலேயே பதிப்பாசிரியராக விளங்கியவர்.
|
9 | திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர் | திருத்தணிகை க.விசாகப் பெருமாளையரின் தம்பியாக 1799 இல் பிறந்த இவரும் பயன்படத்தக்க பல தமிழ் நூல்களைவெளியிட்டவராவார்.
*திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர், திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர் இவ்விருவரும் நீண்டகாலம் வாழ்ந்திருந்து பல நூல்களை இயற்றியும் அச்சிட்டும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
10 | திருவேங்கடாசல முதலியார் | சென்னைக் கல்விச்சங்கத் தமிழ்ப்புலவராக இருந்த இவர் சரஸ்வதி அச்சுக்கூடம் ஒன்றையும் நடத்தி வந்தவர்.
கம்பராமாயணத்தைக் காண்டம் காண்டமாக முதன்முதலில் வெளியிட்டவர் இவரேயாவர்.
|
11 | சந்திரசேகர கவிராச பண்டிதர் ( - 1883) | சோழ நாட்டின் தில்லையம்பூரில் பிறந்தவர். சித்தூர் உயர் நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தவர்.
|
12 | திரிசிரபுரம் வி.கோவிந்த பிள்ளை ( - 1890) | திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடன் பயின்றவர் இவர். மலைக்கோட்டை மௌனசாமி மடத்து வேலாயுத முனிவரிடத்தில் தமிழ் பயின்ற இவர் சிறந்த வைணவராகத் திகழ்ந்து உரையாசிரியராகவும் விளங்கியவர்.
|
13 | கொட்டையூர் த.சிவக்கொழுந்து தேசிகர் | தஞ்சை சரபோஜி மன்னரின் (1798 – 1832) அவைப் புலவராக இருந்து பல நூல்களை இயற்றியவர் இவர். திருத்தணிகை விசாகப் பெருமாளையரும் இவரும் சேர்ந்து, முதன்முதலாகத்
|
14 | காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார் | காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் ஆசிரியராக இருந்தார். சைவத் திருமுறைகளை முதன்முதலில் அச்சிற் பதித்தவர் இவரே.
|
15 | யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண பண்டிதர் (1814 – 1879) |
|
16 | யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர் |
|
17 | யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை (1820 – 1896) | கிறித்தவரான இவர் பல நூல்களை எழுதியவர்.
|
18 | தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர் | சென்னைக் கல்விச்சங்கத்தின் தமிழ்ப் புலவராகவும் முத்தமிழ் வித்தகராகவும் விளங்கிய இவர் பல நாடக நூல்களை இயற்றியவர். 1824 ஆம் ஆண்டில் திரு.தாண்டவராய முதலியாருடன் இணைந்து முதன்முதலாக
|
19 | மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815 – 1876) | பல தமிழ் வித்துவான்களுக்கும் மேலான மகாவித்துவானாக விளங்கிய தலைசிறந்த மகாகவி திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தமக்கு வேண்டிய நூல்கள் அனைத்தையும் தம் கையாலேயே ஓலையில் ஒரே அளவில் மிக அழகாக எழுதிக் குவித்தவர் இவர். கம்பராமாயணம் முழுவதையும் தம் கையாலேயே மூன்றுமுறை எழுதிப் படியோலை பண்ணிய பெரியவர் இவர். 22 தலபுராணங்களும், 6 பிற காப்பியங்களும், 51 பிரபந்தங்களும் கணக்கற்ற தனிப்பாடல்களும் என ஏராளமான இலக்கியங்களை இவற்றிய இவரைப் போன்ற தமிழறிஞர் இந்நூற்றாண்டில் எவருமில்லை. ஏராளமான இலக்கிய இலக்கண ஏட்டுச் சுவடிகளையும் அவர் திரட்டி வைத்திருந்தார். ஆயினும், அச்சில் பதிப்பதில் அவருக்கு அதிக நாட்டமில்லை.
|
20 | யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879) | சைவ சமயத் தொண்டால் சிறப்புற்று, தருமபுர ஆதீனத்தால் ‘நாவலர்’ என்ற பெயர் பெற்ற இவர் பதிப்புத்துறையிலும் பெரும் புகழ் பெற்றவர்.
தம் சைவசமய நூல்களோடு பிற சமய நூல்களான
|
21 | வடலூர் இராமலிங்க அடிகள் (1823 – 1874) | சிதம்பரம் மருதூர் இராமையா பிள்ளையவர்களின் ஆறாவது மனைவிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் இராமலிங்கம் பிள்ளையவர்கள். இளமையிலேயே பற்றற்றவராக விளங்கி ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் நெறியைப் பரப்பிய வள்ளல். சிறந்த நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், இதழாசிரியராகவும், விரிவுரையாளராகவும், சித்த மருத்துவராகவும்,சீர்திருத்தவாதியாகவும், அருள்ஞானியாகவும் விளங்கிய இவர் சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த பேராளர்.
|
22 | பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளாய் (1827 – 1900) | ஹென்றி ஆல்பிரட்டு கிருஷ்ணபிள்ளை என அழைக்கப்பெறும் இவர்,
|
23 | சோடசாவதானம் வீ.சுப்பராய செட்டியார் |
|
24 | கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளை | சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்த இவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
|
25 | யாழ்ப்பாணம் உடுப்பிட்டி கு.கதிரைவேற் பிள்ளை (1829 – 1904) | மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ச் சொல் அகராதியைத் தயாரித்த இவர் காவல்துறை நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர்.
|
26 | புதுவை சவராயலு நாயகர் (1829 – 1911) | தேம்பாவணி உபதேசிகர் என்று கிறித்தவ அன்பர்களால் அழைக்கப்பெறும் இவர்,
|
27 | பொன்னம்பல சுவாமிகள் (1832 – 1904) | கோவலூர் சிதம்பர மடத்தை நிறுவிய இவர்,
|
28 | தொழுவூர் செ.வேலாயுத முதலியார் (1832 – 1889) | சென்னை மாகணக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த இவர் வள்ளலாரிடம் பேரன்பு கொண்டவர். இராமலிங்க அடிகளின் பாடல்களைத் தொகுத்து,
|
29 | காயல்பட்டினம் செய்குஅப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் ( - 1848) | சேனாப் புலவர் என்றும், புலவர் நாயகம் என்றும் அழைக்கப் பெறும் இவர் குணங்குடி மஸ்தானின் நண்பராவார். இவரே
|
30 | யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை (1844 – 1907) | யாழ்ப்பாண அகராதி என்னும் தமிழ்ப் பேரகாதியைத் தொகுத்து அச்சிட்ட இவர் வடமொழி, தென்மொழி பயின்றவர்.
|
31 | யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் (1843 – 1903) | சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன் யந்திரசாலையை நிறுவிய இவர், சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழாசிரியராக இருந்தவர்.
|
32 | யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் (1854 – 1922) | நடமாடும் புத்தக சாலையாக விளங்கிய இவர் வடமொழியும் தென்மொழியும் அறிந்த பெரும்புலவர். பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ள,
|
33 | வல்லுவெட்டித்துறை வயித்தியலிங்கம் பிள்ளை (1852 – 1901) | 1875 ஆம் ஆண்டில்
|
34 | அச்சுவேலி தம்பி முத்துப்பிள்ளைப் புலவர் (1857 – 1921) |
|
35 | திரிகோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை (1852 – 1901) | சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் தொகுப்பில் சிலகாலம் இருந்த இவர்,
|
36 | எதிர்கோட்டை அ.நாராயணையங்கார் (1861-1947) | சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மதுரைத் தமிழ்ச் சங்கத்துக் கல்லூரியின்பேராசிரியராகவும் செந்தமிழ் இதழின் ஆசிரியராகவும் இருந்த இவர் பதிப்புப்பணியில் குறிப்பிடத்தக்கவர்.
|
37 | பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1862 – 1899) | சிறந்த தமிழார்வலராகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய இவர் பல நூல்களை இயற்றி வெளியிட்டவர். எட்டுத்தொகையுள் குறுந்தொகை, நற்றிணை மூலமும் உரையும்,அகநானூறுபோன்றவற்றை உரையுடன் பதிப்பிக்க வேண்டுமென்று பெருமுயற்சி செய்தவர். ஆயினும்
|
38 | காஞ்சி நாகலிங்க முனிவர் (1865 – 1950) | சிறந்த தமிழ்ப் புலவராகிய இவர்,
|
39 | சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1868 – 1915) | இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கணப் புலவராக விளங்கிய இவர் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் நூல்களை வெளியிட்டவர்.
|
40 | மகாவித்துவான் இரா.இராகவையங்கார் (1870 – 1946) | 1903 இல் தொடங்கப்பட்ட செந்தமிழ் மாத இதழுக்கு முதல் ஆசிரியராக விளங்கிய இவர், பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தொகுத்தவராவார்.
|
41 | திரு வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (1870 – 1903) | பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரையே மாற்றியமைத்துக் கொண்ட பெருமையுடைய தமிழறிஞர் இவர்.
|
42 | திரு மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை (1886 – 1947) | பல நூல்களையும் எழுதியுள்ள இவர்,
|
43 | வேதாந்தி கோ.வடிவேலு செட்டியார் (1863 – 1935) | தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்தவரான இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.
|
44 | திருமணம் தி.செல்வக்கோசவராய முதலியார் (1864 – 1921) | முதன்முதலில் எம்.ஏ வகுப்பில் தமிழ் எடுத்துப் படித்தவரும் தமிழ்ப் பேராசிரியர் பணியில் உயர்ந்த ஊதியம் பெற்றவரும் ஆகிய இவர் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நன்கு பயிற்சி பெற்றவர். பல நூல்களை இயற்றி வெளியிட்டவர்.
|
45 | யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை (1832 – 1901) | சட்டம் படித்து, சிறந்த நீதிபதியாகத் திகழ்ந்த இவர் மிகுந்த தமிழ்ப்பற்று உடையவர். பதிப்புத்துறையில் 1854 ஆம் ஆண்டில் நுழைந்தவர். ஆறுமுக நாவலர் 1849-ஆம் ஆண்டில் பதிப்புத்துறையில் ஈடுபட்டதன் பின்னர் இவரும் நாவலருடன் இணைந்து இத்துறையில் செயல்பட்டார்.
|
46 | வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப்பிள்ளை (1846 – 1909) | ‘திருப்புகழ்ப் பதிப்பாசிரியர்’ என்று அன்புடன் அழைக்கப்பெறும் இவர், மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியவர். 1871-ஆம் ஆண்டு முதல் திருப்புகழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டி, முதன்முதலாக அச்சில் பதிப்பிக்க முற்பட்டவர் இவரே.
|
47 | காவேரிப்பாக்கம் ரா.நமச்சிவாய முதலியார் (1876 – 1931) | சிறுவர் சிறுமியர்களுக்கு விளங்கும் வகையில் எளிய இனிய நடையில் பாடநூல்களை முதன்முதலில் பதிப்பித்து அளித்தவர் இவரே. இவர் எழுதிப் பதிப்பித்த தமிழ்க்கடல் வாசகம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
தமிழ்க்கடல் அச்சகம் ஒன்றையும் இவர் சொந்தமாக நிறுவி நூல்களைப் பதிப்பித்து வந்தார்.
|
48 | திரு வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872 – 1936) | வழக்கறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், இதழாசிரியராகவும் திகழ்ந்த இவர்,
|
49 | கயப்பாக்கம் ர.சதாசிவ செட்டியார் (1872 – 1929) | அகத்தியர் தேவாரத் திரட்டு, சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக்கைலாய ஞானவுலா போன்ற நூல்களுக்குக் குறிப்புரையும் விரிவுரையும் எழுதி வெளியிட்ட இவர், மூவர்
|
50 | காஞ்சிபுரம் ர.கோவிந்தராச முதலியார் (1874 – 1949) | சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர்,
|
51 | ஈக்காடு இரத்தினவேலு முதலியார் | இந்நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர்,
|
52 | பூவை கல்யாணசுந்தர முதலியார் (1854 – 1918) | தமிழையும் சைவத்தையும் வளர்த்த பேரறிஞர் இவர். பல நூல்களை இயற்றி வெளியிட்டவர்.
|
53 | மகாவித்துவான் மு.இராகவையங்கார் (1878 – 1960) | மதுரைச் செந்தமிழ் இதழாசிரியராக இருந்த இவர் தனிப்பாடல்களையும் மேற்கோள் பாடல்களையும் தொகுத்துப் பெருந்தொகை எனும் நூலாகப் பதிப்பித்துள்ளார். இவ்வாறே
|
54 | திட்டாணிவட்டம் வே.இராஜகோபாலையங்கார் | சிறந்த தமிழாசிரியராகவும், பாடநூலாசிரியராகவும், இதழாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த இவர்
|
55 | இ.வை.அனந்தராமையர் (1872 – 1931) |
|
56 | சே.கிருஷ்ணமாச்சாரியர் | வை.மு.சடகோபராமாநுஜாச்சாரியாருடன் சேர்ந்து
|
57 | அ.சக்கரவர்த்தி நயினார் (1880 – 1960) | சிறந்த தத்துவப் பேராசிரியராகத் திகழ்ந்த இவர், மேருமந்திரபுராண உரை, நீலகேசி சமய திவாகர விருத்தியுரை, திருக்குறள் கவிராய பண்டிதர் உரை ஆகியவற்றைப் பதிப்பித்தவராவார். |
58 | திருவாரூர் வி.கல்யாணசுந்தரனார் (1883 – 1953) | சிறந்த தமிழறிஞரான இவர் பதிப்புத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர். 1908 இல் உமாபதி குருப்பிரகாசம் அச்சகமும், 1920 இல் சாது அச்சகமும் நிறுவி நூல்களை அச்சிட்டு வழங்கியவர்.
|
59 | நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1884 – 1944) |
|
60 | திருநெல்வேலி கா.சுப்பிரமணியபிள்ளை (1888 – 1945) |
|
61 | டி.கே.சிதம்பரநாத முதலியார் (1882 – 1954) | கம்பராமாயணத்தில் சில பாடல்களைப் புதுமையான முறையில் பதிப்பித்தவர் இவர்.
|
62 | இராவ்பகதூர் ச.பவானந்தம் பிள்ளை | இவர் 1916இல்
|
63 | கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை | இவர்,
|
64 | புன்னைலைக்கட்டுவன் சி.கணேசையர் |
|
65 | ஔவை சு.துரைசாமி பிள்ளை |
|
66 | திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் |
|
67 | ச.சோமசுந்தர தேசிகர் |
|
68 | மாங்காடு வடிவேலு முதலியார் | சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர்,
|
69 | மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை (1896 – 1985) | அண்மைக்காலத்தில் தம் சுய உழைப்பால் இரவு நேரப் பள்ளியில் படித்துயர்ந்து, ஆசிரியராகியவர் இவர். இவர் பரிசீலனை செய்து திருத்திப் பதிப்பித்த நூல்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றித் திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு நூற்பதிப்புத் துறையில் பெரும் வெற்றி பெற்றவர் இவர். பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் முதல், அனைத்து நூல்களையும் பதிப்பிக்கும்பொழுது ஏற்படும் திருத்தம் முதலிய செய்யும் விதிமுறைகளைப்பலரும் அறிய வழிகாட்டியானவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கதாகும். |
69 | பேரா.மு.சண்முகம் பிள்ளை | அண்மையில் வாழ்ந்திருந்து மறைந்த தமிழ்நூல் பதிப்பாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். சுமார் 125 நூற்பதிப்புகளையும், 10 ஆராய்ச்சி நூல்களையும், தமிழ் – தமிழ் அகரமுதலி, தமிழ்நூல் விவர அட்டவணை ஆகிய தொகுப்பு நூல்களையும், 185 ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கிய இவரைப் ‘பதிப்புச்செம்மல்’ என்றும் ‘பதிப்பு அரசர்’ என்றும் அறிஞருலகம் போற்றி வருகின்றது. இவருடைய சுவடிப் பதிப்புகள் மட்டுமே 26 நூல்களாகும். இவை பெரும்பாலும் சுவடிகளிலிருந்து முதன்முறையாகப் பதிப்பிக்கப் பெற்றவையாகும்.
|
No comments:
Post a Comment