vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

12.0 இடைச் செருகல்:

பேரிலக்கியங்கள் எனில் அவற்றில் இடைச் செருகல்கள் இருத் தல் இயற்கையாக உள்ளன. திருத்தொண்டர் புராணமும் இதற்கு விலக்கன்று. புலவர் சபாபதி முதலியார் அவர்களின் பதிப்புக்கள் இரண்டனுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எண்ணிக்கை காணப்படு கின்றது. ஒன்றில் 4299 என்று உள்ளது. மற்றொன்றில் 4300 என்று உள்ளது.
எனினும், சிவக்கவிமணி அவர்கள் இவை தவறெனக் குறித் துள்ளார்கள். ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் பதிப்பிலும், ஆறுமுக நாவலர் பதிப்பிலும் 4286 பாடல்கள் உள்ளன. பின்வந்த பதிப்புக்கள் பலவற்றிலும் இவ்வெண்ணிக்கையே உள்ளது.
`சேக்கிழார் புராணம்' அல்லது `திருத்தொண்டர் புராண வரலாறு' எனப்படும் நூலைச் செய்தருளியவர் உமாபதி சிவசாரியார் ஆவர். இந்நூலில் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள காண்டம், சருக்கம், பாடல்கள் ஆகியவற்றைத் தாம் கண்டவாறு எடுத்துக் கூறிப் போற்றியுள்ளார். அவ்வகையில், அந்நூற்கண் திருத்தொண்டர் புராணத்தில் காணும் பாடல்கள் 4253 எனக் குறிக்கின்றார். இதற்கு அரணாகப் பழைய ஏட்டுச் சுவடிகளுள் ஒன்றன் இறுதியில்,
கொண்டலணி தண்டலை சூழ் குன்றை நகர்ச் சேக்கிழார்
ஒண்டரணி யோருய்ய வோதினார்-கொண்ட புகழ்
என்றதொரு நாலாயி ரத்திருநூற் றைம்பத்து
மூன்று திருவிருத்த மும். -சேக்கிழார் புராணம்
என்றொரு பாடலும் உள்ளது.
இவ் வெண்ணிக்கையே கொள்ளத்தக்கது என்பது சிவக்கவி மணியவர்கள் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் கருத்தாகும். இவ் வகையில் (4286-4253=33) 33 பாடல்கள் மிகையென அறிய இயலுகின்றது. சேக்கிழார் திருவாக்காக இருந்து, அதனைக் கழித்து விடின் பெரும் தவறாகுமே என்ற அச்ச உணர்வும், ஆழ்ந்த நுண்ணறி வும் கொண்ட சிவக்கவிமணி அவர்கள், பின்வரும் 33 பாடல்கள் இடைச் செருகலாய் இருக்குமோ என ஐயுறுகின்றார்.
1. திருமலைச் சிறப்பு = பாடல்-8
2. கண்ணப்பர் = பாடல்கள் 158 முதல் 162 வரை
3. ஆனாயர் = 9; பாடல்-19
4. மூர்த்தியார் = 9; பாடல்கள் 29-30
5. திருக்குறிப்புத் தொண்டர் = 9; பாடல்கள் 99,100,101
6. திருநாவுக்கரசர் = 9; பாடல்-356.
7. திருஞானசம்பந்தர் = 9; பாடல்கள் 466, 705, 715,716, 734, 735, 812
8. ஏயர்கோன் = பாடல்கள்34,122
9. சாக்கியர் = 9; பாடல்-7
10. கலியர் = 9; பாடல்-2
11. பரமனையே பாடுவார் = முதற்பாடல்
12. திருவாரூர்ப் பிறந்தார் = 9; முதற்பாடல்
13. முப்போதும் திருமேனி = 9; பாடல்-3
தீண்டுவார்
14. முழுநீறு பூசிய முனிவர் = பாடல்கள் 1 முதல் 5 வரை
15. பூசலார் = 9; முதற்பாடல்
இவ்வாறு ஐயுறத்தகும் 33 பாடல்களில் 12 பாடல்கள் நுண்ணி தாக எண்ணின், அவை இடைச் செருக்கலாக இருக்கும் என்றே தோன்றுகின்றன. அப்பாடல்கள்:
பொருப்பினில்வந் தவன்செய்யும் பூசனைக்கு முன்பென்மே
லருப்புறுமென் மலர்முன்னை யவைநீக்கு மாதரவால்
விருப்புறுமன் பெனும்வெள்ளக் கால்பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படியவ் விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.
உருகியவன் பொழிவின்றி நிறைந்தவவ னுருவென்னும்
பெருகியகொள் கலமுகத்திற் பிறங்கியினி தொழுகுதலா
லொருமுனிவன் செவியுமிழு முயர்கங்கை முதற்றீர்த்தப்
பொருபுனலி னெனக்கவன்றன் வாயுமிழும் புனல்புனிதம்.
இம்மலைவந் தெனையடைந்த கானவன்ற னியல்பாலே
மெய்ம்மலரு மன்புமேல் விரிந்தனபோல் விடுதலாற்
செம்மலர்மே லயனெடுமான் முதற்றேவர் வந்துபுனை
யெம்மலரு மவன்றலையா லிடுமலர்போ லெனக்கொவ்வா.
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பா
னையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியி
லெய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய.
மன்பெருமா மறைமொழிகண் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கு
மின்பமொழித் தோத்திரங்கண் மந்திரங்க ளியாவையினு
முன்பிருந்து மற்றவன்தன் முகமலர வகநெகிழ்ந்த
வன்பினினைந் தெனையல்லா லறிவுறா மொழிநல்ல.
(தி.12 பு.10 பா.158-162)
நீலமா மஞ்ஞை யேங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட
வாலுமின் னிடைசூழ் மாலைப் பயோதர மசைய வந்தான்
ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்.
(தி.12 பு.14 பா.19)
எல்லா முடைய வீசனே இறைவ னென்ன வறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே யாகிப் புல்ல ராகுவா
ரல்லார் கண்டர் தமக்கிந்த வகில மெல்லா மாளென்ன
வல்லா ரிவரவ் வேடத்தை மாற்றா தன்பின் வழி நிற்பார்.
(தி.12 பு.34 பா.7)
ஆதார மாயனைத்து மாகி நின்ற
வங்கணனெம் பெருமானீ ரணிந்த வேணிக்
காதார்வெண் டிருக்குழையா னருளிச் செய்த
கற்பமநு கற்பமுப கற்பந் தானா
மாகாதென் றங்குரைத்த வகற்ப நீக்கி
யாமென்று முன்மொழிந்த மூன்று பேத
மோகாதி குற்றங்க ளறுக்கு நீற்றை
மொழிவதுநம் மிருவினைகள் கழிவ தாக.
அம்பலத்தே யுலகுய்ய வாடு மண்ண
லுவந்தாடு மஞ்சினையு மளித்த வாக்க
ளிம்பர்மிசை யனாமயமா யிருந்த போதி
லீன்றணிய கோமயமந் திரத்தி னாலேற்
றும்பர்தொழ வெழுஞ்சிவமந் திரவோ மத்தா
லுற்பவித்த சிவாங்கிதனி லுணர்வுக் கெட்டா
எம்பெருமான் கழனினைந்தங் கிட்ட தூநீ
றிதுகற்ப மென்றெடுத்திங் கேத்த லாகும்.
ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண்
டழகுறநுண் பொடியாக்கி யாவின் சுத்த
நீரணிவித் தத்திரமந் திரத்தி னாலே
நிசயமுறப் பிடித்தோம நெருப்பி லிட்டுச்
சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத்
திருநீறா மநுகற்பந் தில்லை மன்றுள்
வாரணியு முலையுமையாள் காண வாடும்
மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே.
அடவிபடு மங்கியினால் வெந்த நீறு
மானிலைக ளனறொடக்க வெந்த நீறு
மிடவகைக ளெரிகொளுவ வெந்த நீறு
மிட்டிகைகள் சுட்டவெரி பட்ட நீறு
முடனன்றி வெவ்வேறே யாவி னீரா
லுரைதிகழு மந்திரம்கொண் டுண்டை யாக்கி
மடமதனிற் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
வெந்ததுமற் றுபகற்ப மரபி னாகும்.
இந்தவகை யாலமைத்த நீறு கொண்டே
யிருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்ன
ரந்தமிலா வரனங்கி யாறு மெய்ம்மை
யறிவித்த குருநன்மை யல்லாப் பூமி
முந்தவெதி ரணியாதே யணியும் போது
முழுவதுமெய்ப் புண்டரஞ்சந் திரனிற் பாதி
நந்தியெரி தீபநிகழ் வட்ட மாக
நாதரடி யாரணிவர் நன்மை யாலே.
(தி.12 பு.63 பா.1-5)
இவை இப்பதிப்பில் நீக்கப் பெற்றுள்ளன. எனினும், இப்பாடல் களும் எஞ்சிய 21 பாடல்களும் திருவருள் துணை கொண்டு மேலும் எண்ணித் துணிய இடனுண்டு.
12.1 சேக்கிழார்: இவ்வரும் பெரும் நூலை அருளியவர் அருள்மொழித் தேவர் ஆவர். சேக்கிழார் குடியினர்; காலப் போக்கில் குடிப்பெயரே நெடிது நின்று நிலவுவதாயிற்று. இவர் இளவல் பாலறாவாயர் என்பார். சேக்கிழார்தம் மதி நுட்பம் நூலோடுடைய பேரறிவைக் கண்ட அக்காலச் சோழப் பெருவேந்தராய `அநபாய சோழர்' இவரை முதலமைச்சராக ஏற்றார். இவர்தம் ஆற்றலும், சால்பும், கண்ட அவ்வரசர் `உத்தம சோழப் பல்லவராயன்' என்ற பட்டமும் வழங்கிச் சிறப்பித்தார்.
தம் அரசர் உயிர்க்குறுதி பயக்கும் நூல்களைக் கல்லாது, சிற்றின்பம் வெஃகுதற்கு ஏதுவாய சிந்தாமணியைப் பயின்றுவர, உறுதி உழை இருந்தான் கூறல் கடன் என்பதற்கு ஏற்ப, அந்நூலை விடுத்து, ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கூறுவதாய அருள் நூல்களைக் கேட்டுப் பயன்பெறுதல் தக்கதெனக் கூறி, ஆளுடைய நம்பிகள் தொகுத்தும், நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தும் அருளியிருக்கும் அடியவர் வரலாறுகளைக் கூறக் கேட்ட அரசரும் மகிழ்ந்து, அவ்வரலாறுகளைக் காவியமாக அருள வேண் டச், சேக்கிழாரும் தில்லைக்குச் சென்று, பெருமானை வணங்கக் கூத்தப் பெருமானும் வானொலிவழி `உலகெலாம்' என அடியெடுத் துக் கொடுப்ப, அவ்வருள் மொழியையே முதற் பொருளாகக் கொண்டு, இவ்வரிய வரலாற்றைச் செய்தார். அரசரும் அங்கு வந்து மிக மகிழ்ந்து, ஆசிரியர் பெருமானாரையும் அவர் அருளிய நூலை யும் யானை மீது ஏற்றி, நகர்வலம் கொளச் செய்து, தொண்டர் சீர்பரவு வார் என்பதொரு பட்டமும்கொடுத்து, பொன்முடிசூட்டிப் போற்றி மகிழ்ந்தனர். திருவருளில் திளைத்து நின்ற இவர் தில்லையிலேயே இருந்தருளி வீடுபேறு பெற்றனர்.
சேக்கிழார் அமைச்சராகப் பணிசெய்து வரும் பொழுது, திரு நாகேச்சுரத்துப் பெருமானிடத்து அயரா அன்பு கொண்டதன் வாயி லாக அத்திருக்கோவிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்து வந்தார். இவ் வன்பு மீதூர்வால், தம் ஊராகிய குன்றத்தூரிலும், திருநாகேச் சுரத்து இறைவரின் நினைவாகத் திருக்கோவில் ஒன்று சமைப்பித்து, அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டு, அத்திருக்கோவிலுக்கு, நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் வழிவழியாக நடந்துவர அறக்கட் டளைகளையும் அமைத்தார்.
12.2 காலம்: ஆசிரியர் சேக்கிழார் காலம்பற்றி மூவகைக் கருத் துகள் நிலவுகின்றன. 1. கங்கை கொண்ட சோழன் காலத்தவர் (கி. பி. 1030 - 1045); 2. முதற் குலோத்துங்கன் காலத்தவர் (கி. பி. 1073 - 1118); 3. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர்(ி. பி. 1123 - 1148)
சேக்கிழார், தம் காலத்து வாழ்ந்த அரசரை அநபாயன், அபயன் என்ற பெயர்களாலும், குலோத்துங்கன் என்ற பெயராலும் குறிக்கின் றார். அன்றியும், அப்பேரரசர் பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தார் என்றும் குறிப்பிடுகின்றார். இப்பெயர்கள் எவையும் கங்கை கொண்ட சோழற்கு இல்லை. இவ்வரிய திருப்பணியையும் அவர் செய்திலர். ஆதலின் சேக்கிழார், கங்கை கொண்டசோழன் காலத்தவர் அல்லர்.
இனி முதற்குலோத்துங்கனுக்கும் அநபாயர் என்ற பெயர் இருந் ததாகத் தெரிந்திலது. அவரைப்பற்றி எழுந்த கலிங்கத்துப் பரணி யிலும், இவர் பெயர் பலவாகக் குறிப்பிட்டு இருக்க, இவ்வநபாயர் என்ற பெயர் யாண்டும் காணப்படவில்லை. மேலும் இவ்வரசர் தில் லைச் சிற்றம்பலத்திற்கு மட்டுமே பொன் வேய்ந்தவர் ஆதலின், சேக் கிழார் குறிக்குமாறு பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்த அநபாயர் இவரின் வேறாவர் என்பதுதெளிவாகிறது.
சேக்கிழார், தம்கால எல்லையில் வாழ்ந்திருந்த சோழரை அநபாயர் என்ற பெயரில் பத்து இடங்களில் குறித்தருளுகின்றார். இவற்றுள் ஓரிடத்துச் `சேயவன் திருப்பேரம்பலம் செய்ய, தூய பொன்னணி சோழன்.....அநபாயன்' என்று குறிக்கின்றார். எனவே, இப்பெயருக்கும் இத்திருப்பணிக்கும் உரிய அரசன் இரண்டாம் குலோத்துங்கனே என அறிய இயலுகின்றது. எனவே இவர்தம் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும் என்பது தெளிவு. இவ்வரசர் சிற்சில நிலங்களைத் தொகுத்து அவற்றிற்குக் `குலோத்துங்க சோழ திருநீற்றுச் சோழன் நல்லூர்', `குலோத்துங்கசோழன், திருத்தொண்டர் சீர் பரவு வார்' எனும் பெயரும் வழங்கிச் சிறப்பித்துள்ளமையும் குறிக்கத் தக்கதாம்.
சேக்கிழாரின் இளவல் பாலறாவாயர் குன்றத்தூரில் தம் பெயரால் திருக்குளம் ஒன்று வெட்டியும், அரசர் வேண்டுகோளால், அங்கிருந்தவாறே அவருக்கு உறுதுணையாய் நாட்டைப் பேணியும் வந்தார். இவ்வரசர் அவருக்குத் `தொண்டைமான்' என்றொரு பட்டம் வழங்கிச் சிறப்பித்தமையும் அறிய இயலுகின்றது. இவை யெல்லாம் மேற்கண்ட கால எல்லையில் சேக்கிழார் வாழ்ந்தமைக்கு அரணா கின்றன.
உமாபதி சிவம் என்பவரால் அருளப்பெற்ற திருத்தொண்டர் புராண வரலாறே, இவர் வரலாற்றை ஓராற்றான் அறியத் துணை நிற்கின்றது. இவ்வாசிரியர் புறச் சந்தான குரவர்களில், நான்காம வராய உமாபதி சிவமாவர் என்று கூறலே இதுகாறும் மரபாய் இருந்து வந்தது. இக்கால ஆய்வாளர்கள் அவரின் வேறாவர் என்று கருதுகின் றனர். எவ்வாறாயினும் சேக்கிழார் வரலாற்றை இவ்வளவில் அறிதற்கு ஈதொன்றே நிலைக்களனாக உள்ளது.
12.3 நூற்பெயர்: இவ்வரிய நூற்கு ஆசிரியர் இட்ட பெயர் `திருத்தொண்டர் புராணம்' என்பதேயாம். எனினும் `எடுக்கு மாக்கதை' (தி.12 பாயிரம்,3) எனவரும் தொடர்கொண்டு இதற்குப் பெரியபுராணம் என்பதொரு பெயரும் காலப்போக்கில் வழங்கலா யிற்று. மா-பெரிய, புராணம்-கத. இப்பெயரே இன்றைய நிலையில் பெரிதும் வழக்காறாகவுள்ளது.
12.4 அரங்கேற்றம்: இப்பெரு நூலை `அநபாயனின் அரசவை ஏற்றது' என்பதற்கும், கூத்தப் பெருமான், வான்வழி `உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தருளிய அருளிப்பாடே, இந்நூல் செயற்கு ஏதுவாயிற்று என்பதற்கும்,
மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம்ப லம்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை. (தி.12 பாயிரம்,8)
அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற் காம்எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாம்அன்றே. (தி.12 பாயிரம்,9)
எனவரும் சேக்கிழாரின் திருவாக்குகள் சான்றாகின்றன.
இவ்வரிய நூலைத் தெய்வச் சேக்கிழார், தில்லையில், சித்திரைத் திருவாதிரை நாளான 4.4.1139இல் தொடங்கி, எதிராண்டு சித்திரைத் திருவாதிரை நாளான 22.4.1140இல் முற்றுவித்தார் என்பர், ஆய்வா ளர் குடந்தை நா. சேதுராமன் அவர்கள்.
12.5 பதிப்புக்கள்: இத் திருத்தொண்டர் புராணம் இதற்கு முன், மூலமாகவும் குறிப்புரையுடனும் உரையுடனுமாகப் பல பதிப்புக்கள் வந்துள்ளன. உரையுடன் வந்தனவற்றில், நிறைவு பெற்றும் பெறாதது மாக இருநிலையில் வெளிவந்துள்ளன. அவை யாவும் ஈண்டு நினைவு கூர்தற்குரியன.
12.5.1 மூலமாக வந்த பதிப்புக்கள்:
() காஞ்சி சபாபதி முதலியார் பதிப்பு: ஆராய்ச்சி முன்னுரை யுடன், முதற் பகுதி - கி. பி. 1854, இரண்டாம் பகுதி - கி. பி. 1862.
() ஆறுமுக நாவலர் வரலாற்றையொட்டிய பதிப்பு, முன் குறிப்புகளுடன் (சூசனம்), காரைக்காலம்மையார் வரலாறு வரை - கி.ி 1884.
() சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றப் பதிப்பு - .பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரை யுடன் கி. பி. 1930.
() திருப்பனந்தாள் - காசித் திருமடத்துப் பதிப்பு - கி. பி. 1950.
()திருவாவடுதுற ஆதீனப் பதிப்பு - கி. பி. 1988.
() ஆறுமுக நாவலர் அவர்கள் சூசனம் எழுதாத எஞ்சிய பகுதிகளுக்கு, யாழ்ப்பாணம், ஏழாலை, பண்டிதர் மு. கந்தையா அவர் கள், வரலாற்றை ஒட்டிய முன் குறிப்புகளுடன் (சூசனம்) எழுதி வெளிவந்த மலேசிய, சைவசித்தாந்த நிலையப் பதிப்பு - கி. பி. 1993.
12.5.2 குறிப்புரையுடன் வந்த பதிப்புக்கள்:
() திரு. வி. . அவர்களின் குறிப்புரையுடன்: கி. பி. 1905 - 1934.
() திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருத்தொண்டர் மாக்கதை, குலசை . இராமநாதபிள்ளை அவர்கள் வரலாற்றுக் குறிப்புரைகளுடனும், திருப்பக்கிழார் திரு. சு. . இராமசாமிப் புலவர் அவர்களின் விளக்கக் குறிப்புரைகளுடனும் - கி. பி. 1970.
() திரு. வி. . அவர்களின் பதிப்பில் திரு. . . ஞானசம் பந்தன் அவர்கள் செய்த சில திருத்தங்களுடன் - கி. பி. 1993.
12.5.3. உரை நிறைவு பெறாத பதிப்புக்கள்:
() மழவை மகாலிங்க ஐயர் உரை: (ஆனாயர் வரை) முதற் பதிப்பு - கி. பி. 1845 (காரைக்கால் அம்மையார் வரை) - கி. பி. 1846.
() அருள்திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் (ஏயர்கோன் கலிக்காமர் வரை) பதிப்பு - கி. பி. 1885.
() திரு. ஆலாலசுந்தரம் பிள்ளை உரைப் பதிப்பு - 1. அமர்நீதி யார் சருக்கம் வரை - கி. பி. 1918; 2. இலைமலிந்த சருக்கம் மட்டும் - கி. பி. 1923; 3. நூல் தொடக்கம் முதல் ஆனாய நாயனார் முடிய - கி. பி. 1924.
() திரு.ி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதிய பெரியபுராண விளக்கம் என்ற பெயரில் அல்லயன்ஸ் கம்பெனியார் பதிப்புக்கள் - 2105 பாடல்கள் வரை) 1987முதல் 1991 வரை.
12.5.4 உரை நிறைவு பெற்ற பதிப்புக்கள்:
() திரு.ி. சுப்பராய பிள்ளை அவர்கள் உரையுடன் முதற் பகுதி - கி. பி. 1893; இரண்டாம் பகுதி - கி. பி. 1895.
() சிவத்திரு. சிவக்கவிமணி சி.. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் உரையுடன் - பகுதி பகுதியாக நூல் முழுமையும் வெளிவந்த ஆண்டுகள் - கி. பி. 1937 முதல் 1968 வரை.
() ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் எழுதிய உரையைத் தொடர்ந்து, எஞ்சிய பகுதிக்கும் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் உரை நிறைவு செய்து வெளியிட்ட பதிப்பு - கி. பி. 1898.
() சென்னை, வர்த்தமானன் பதிப்பு, பொழிப்புரையுடன் - கி. பி. 1990.
இவ்வகையில், தொடர்ந்து பெரியபுராணத்தைத் தமிழ்ச் சைவ உலகிற்குப் பதிப்பித்து வழங்கிய அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும் அடியவனின் நன்றியும் வணக்கமும் என்றென்றும் உரியனவாகும்.
இப்பதிப்புக்களில், சிவக்கவிமணி அவர்களின் பதிப்பு, பாட் டின் உட்பொருள் அன்றியும், ஆண்டைக்கு இன்றியமையா யாவை யும் விளங்கத் தன்னுரையானும் பிறநூலானும் ஐயம் அகல ஐங்காண் டிகை உறுப்பொடு மெய்யினை எஞ்சாது இசைக்கும் விருத்தியுரை யாய பதிப்பாகும். அப்பெருமகனாருக்குச் சிறப்புவகையானும் அடிய வனின் வணக்கத்தைதயும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் கடப்பாடுடையேன்.
பன்னிரு திருமுறைகளும் தக்க உரை விளக்கங்களுடன் தம் அருளாட்சிக் காலத்தில் நிறைவாக வரவேண்டும் எனத் திருவுளங் கொண்டு, திருவருளால் அவ்வரிய பணியை நிறைவு செய்தருளி யிருக்கும் தருமை ஆதீனம் 26ஆவது குருமூர்த்திகளாக விளங்கும் ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் பல்லாற்றானும் போற்றி வணங்குதற்குரியவர்களாவார்கள். சிவனடியே சிந்திக்கும் திருவுள்ள மும், பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும், நாளும் தாம் வழிபட்டு வரும் சொக்கநாதப் பெருமானைப் பூசனை செய்துவரும் திருக்கரங் களும் உடையவர்கள். அவர்கள் அடியவனை ஆட்கொண்டருளித் தொடர்ந்து பல்வேறு சிவப் பணிகளைச் செய்து உய்யுமாறு பணித் தருளி வருபவர்கள். அவர்கள் இத்திருத்தொண்டர் புராண உரைப் பணியை அடியவனிடத்து வழங்கி ஆட்கொண்டருளிய பெருங்கரு ணைக்கு அடியேன் என்றென்றும் போற்றி வணங்கிவரும் கடப்பாடு டையேன். அவர்களின் திருவடி மலர்களை வணங்கி மகிழ்கின்றேன்.
இஃது, உரைநிறைவுற்ற பதிப்புக்களில், ஆறாவது பதிப்பாக விளங்குகின்றது. இதற்குமுன் பதிப்பித்த பெருமக்கள் அனைவர்க்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வுரைப் பதிப்பு நிறைவு பெறுதற்கு ஏதுவாகப் பொருள் உதவிய அன்பர்கள் அனைவர்க்கும் சிறப்பாக இப்பன்னிரண்டாம் திருமுறைப் பதிப்புக்கு உதவிய அருட்செல்வர் திரு எம். . சிதம்பரம் அவர்களுக்கும் திரு. . சி. முத்தையா அவர்களுக்கும், உடனிருந்து எழுதுதற்கும், திருத்துதற்கும் உதவிய அறிஞர் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment